Monday, September 24, 2007

கல்யாண சமையல் சாதம்-காலி வயிறுகள் பாவம்

இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் கீழே:-




Subject: India Shining: Salaries ......Just have a look at this >>>Think

Subject: India Shining: Salaries ......Just have a look at this >>>Think
Have a look at this Salary & Govt. Concessions for a Member of Parliament (MP)
Monthly Salary : 12,000 Expense for Constitution per month : 10,000 Office expenditure per month : 14,000 Traveling concession (Rs. 8 per km) : 48,000 ( eg.For a visit from kerala to Delhi & return: 6000 km) Daily DA TA during parliament meets : 500/day
Charge for 1 class (A/C) in train: Free (For any number of times) (All over India )
Charge for Business Class in flights : Free for 40 trips / year (With wife or P.A.)
Rent for MP hostel at Delhi : Free
Electricity costs at home : Free up to 50,000 units
Local phone call charge : Free up to 1 ,70,000 calls.
TOTAL expense for a MP [having no qualification] per year : 32,00,000 [i.e. 2.66 lakh/month]
TOTAL expense for 5 years : 1,60,00,000 For 534 MPs, the expense for 5 years : 8,54,40,00,000 (nearly 855 crores)
AND THE PRIME MINISTER IS ASKING THE HIGHLY QUALIFIED, OUT PERFORMING CEOs TO CUT DOWN THEIR SALARIES.....
This is how all our tax money is been swallowed and price hike on our regular commodities.......
And this is the present condition of our country:
855 crores could make their life livable !! Think of the great democracy we have............. PLEASE FORWARD THIS MESSAGE TO ALL REAL CITIZENS OF INDIA .. but, STILL Proud to be INDIAN
i know hitting a delete button is easier.......bt.......try 2 press fwd button 2 make people aware of it!




















Wednesday, September 12, 2007

வடை கறி

சில நாட்களுக்கு முன் பத்திரிகையில் படித்த செய்திஒன்று.(D.C.8,sep 2007)தமிழ்,தெலுங்குஇரண்டு மொழித் திரைப்படங்களிலும் பிரபலமான ஒரு நடிகை சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஒரு அரசியல் பிரமுகரின் உடன் பிறப்புடன் உல்லாசமாக இருந்த போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.அதே ஓட்டல் அறையொன்றில் ஒரு மணி நேரம் காவலில் வைக்கப்பட்டுப் பின் விடுவிக்கப்பட்டார்.காரணம்,உயர் அதிகாரியின் உத்தரவு மற்றும் அரசியல் பிரபலத்தின் குறுக்கீடு.கொழுப்பேறி,அரிப்பெடுத்து மேலும் வசதியைப்பெருக்கிகொள்ள ஒரு உயர் மட்ட நடிகை தவறு செய்தால் மன்னிக்கப் படுகிறாள்.சட்டத்தின் கைகள் கட்டப்படுகின்றன.ஆனால் வறுமை காரணமாக,வயிற்றுச்சோற்றுக்காக ஒருத்தி தவறு செய்தால் அவளை காப்பற்ற யார் வருவார்





புதுமைப்பித்தனின்சிறுகதை ஒன்று நினைவுக்கு வருகிறது.உடல் நிலை சரியில்லாத கணவனுக்காக உடலை விற்கும் ஒரு பெண்.





"அம்மாளுவும் அவனும் இருளில் சென்று மறைந்தனர்.அம்மாளுவுக்கு அன்று முக்கால் ரூபாய் வருமானம்.புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான். கற்பு,கற்பு என்று கதைக்கிறீர்களே!

இதுதான் அய்யா பொன்னகரம்"


இவ்வாறு கதை முடியும்.


இந்தக்கதையையும் நடிகை சம்பந்தப்பட்ட நிஜ நிகழ்வையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

கதையில் வரும் பெண்ணைக் காவல் துறை பார்த்திருந்தால் அவள் கைது செய்யப்பட்டிருப்பாள்.புருஷன் உணவின்றி மேலும் நலிந்திருப்பான். ஆனால் இங்கோ?

இதுதான் அய்யா நிஜம்

Tuesday, September 11, 2007

ரவா கேசரி,மிக்சர்

சென்னை ராயப்பேட்டை மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், அமிலம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற ஒரு பையனின் வெந்து போன உணவுக்குழாயை அறுவைச் சிகிச்சை மூலம் சீரமைத்து, ஒரு புது வாழ்க்கையை அளித்திருக்கிறார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அப் பையனின் தந்தை அது போலவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன் வந்திருக்கிறார்.

நல்ல உள்ளத்திற்கு நன்றி.அபாரமாக முன்னேறி வரும் மருத்துவத்துறைக்கு வாழ்த்துக்கள்.

இந்த முன்னேற்றத்தின் பயன் இந்த நாட்டின் கடைசிக் குடி மகனுக்கும் கிடைக்கிறதா?சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகள் ஆன பின்னும் ஏழை இந்தியனின் நிலை என்ன?"தனியொருவனுக்குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்றான் பாரதி.குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவாவது அனைவருக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டாமா?

வெறும் வாக்குறுதிகள் சோறு போடுமா?

பாகற்காய் வறுவல்

இன்றைய தினசரியில் படித்த செய்தி ஒன்று.கசப்பான செய்தி;படித்தவுடன் அந்தக் கசப்புடன் நம்மைக் காரமாக்கும் செய்தி.மத்திய அமைச்சர் சங்கர் சிங் வகேலா அவர்கள் விதர்பா விவசாயிகளின் தற்கொலை பற்றிக் கிண்டல் செய்திருக்கிறார்.அவர்கள் சோம்பேறிகளாம்;அவர்கள் தற்கொலைக்கு அவர்களேதான் காரணமாம்.
வறுமையில் வாடி தற்கொலை செய்து கொண்ட ஏழை விவசாயிகள் பற்றி ஒரு பொறுப்புள்ள அமைச்சர் பேசும் பேச்சா இது.பேசுவார்.ஏனென்றால் இறந்தவர்களுக்கு வாக்கு இல்லையே.அவர்களைப் பற்றி என்ன கவலை?
வேறெந்த நாட்டிலும் பொறுப்பான பதவி வகிப்பவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம்.
இந்த நாட்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்காத வரை,ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஏமாளியாகத்தயாராக இருக்கும் வரை,திறமையற்ற ஊழல்பேர்வழிகளைத்தூக்கி எறியத்தயாராகாதவரை இது தொடரும்.
the people get the government they deserve.
"மேரா பாரத் மஹான்"