Thursday, August 13, 2009

காவிரி நீர் சாணக்கியம்!

இனித் தமிழ் நாட்டு விவசாயிகளுக்குக் கவலையில்லை!மூன்று போகம் விளைச்சலைப் பார்க்கலாம்!காவிரி நீர் பெருக்கெடுத்து ஓடி தமிழ்நாடு செழிக்கப்போகிறது!தமிழ்நாட்டுக்கு வேண்டிய காவிரி நீரைக் கர்நாடகா அரசு தடையின்றித் தரப் போகிறது!அது மட்டுமா?ஹொகேனக்கல் திட்டம் நிறைவேறி தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மகிழ்ச்சியில் திளைக்கப் போகின்றன.எவ்வளவு எளிதாக பிரச்சனை முடிந்து விட்டது?என்ன ராஜ தந்திரம்?என்ன அரசியல் சாணக்கியம்?இது தெரியாமல் இத்தனை நாட்களாக காவிரி நீர் ஆணையம்,உச்சநீதி மன்றம் என்றெல்லாம் ஆண்டுகள் வீணாக்கப் பட்டு விட்டனவே?
இதோ,கர்நாடகத்தில் வள்ளுவர் சிலையும்,பதிலுக்கு,தமிழ்நாட்டில்,சர்வக்ஞர் சிலையும் திறக்கப் பட்டு விட்டன.பிரச்சினைகள் தீர்ந்தன.
வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் தொடங்கட்டும்!புதிய பட்டங்கள் வழங்கப்படட்டும்! ஆகா!ஆகா!இதுவன்றோ வெற்றி?

தமிழர்,கன்னடிகா பாய்,பாய்!!(இந்தி,சீனி பாய் பாய் போல)