Friday, April 3, 2009

பிணத்துடன் உடலுறவு!?

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தி.
முப்பது வயதான ஒரு ஆண்,தன் மனைவியை உடலுறவுக்கு அழைத்து,அவள் மறுக்கவே,ஸ்கிப்பிங்க் கயிற்றால் அவள் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு,உயிரற்ற அந்த உடலுடன் உறவு கொண்டுள்ளான்.
என்ன ஒரு வக்கிரம்?
மன நல மருத்துவர்கள் சொல்கிறார்கள் இது ஒரு விதமான மன நோய் என்று.அதற்கான ஆங்கிலப் பெயர்-'necrophilia'.

ஆனால் வள்ளுவர் இந்த விஷயத்தை ஒரு உவமையாக உபயோகப்படுத்தி,வேறு ஒரு செயலை இதனுடன் ஒப்பிடுகிறார்--

“பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.”
பொருளையே விரும்பும்பொது மகளிரின் பொய்யான தழுவுதல்,இருட்டறையில், தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.

ரத்தினச் சுருக்கமாகப் பொட்டில் அறைந்தது போல் சொல்லி விட்டார் அல்லவா?

No comments: